எது இயல்பானது, எது அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது, எது மரியாதைக்கும் போற்றுதலுக்கும் உரியது, எது அழகற்றது, எது ஒழுக்கம், எது மதிக்கத்தக்கதல்ல போன்றவைகளையே சமூகச் சொல்லாடல்கள் என்கிறோம். சமூகச் சொல்லாடல்கள் என்பன இயற்கையானதல்ல; அதிகாரத்தால் கட்டமைக்கப்பட்டவை. தமிழ்ச் சமூகத்தில் விளிம்புநிலை சாதிகள், பழங்குடிகள் மற்றும் பெண்கள் போன்றவர் பற்றிய பொது அபிப்ராயம் தாழ்த்தப்பட்டதாக, தீண்டத்தகாததாக, சுத்தமற்றதாக, ஒழுக்கக்குறைபட்டதாகவும், குற்றம் புரிபவையாகவும் வரையறுக்கிறது. இவை சமூகத்தின் ஒவ்வொரு தனிநபரும் கற்றுக்கொண்டுள்ள பயின்றுகொண்டுள்ள சமூகச் சொல்லாடல்களின் தொகுப்பாகும். ஆக இங்குச் சமூகச் […]











