கலை இலக்கிய விமர்சன சிறு சஞ்சிகை
மனிதம் நிரம்பிய கதைகள் – ‘உவர்’ தொகுப்புக் குறித்து
ஞா.தியாகராஜன்

மணல் வீடு சிற்றிதழில் சிவசித்துவின் ‘உறைதல்’ கதை முதலில் பிரசுரமானது. சிறுகதைக்கான சமகால வரையறைகள் எதையும் தன்மீது சுமத்திக்கொள்ளாமல் இயல்பாக எழுதப்பட்ட ‘உறைதல்’ முதல் கதை என்பது போன்ற எந்தச் சாயலுமின்றித் தரமானதாகவே எழுதப்பட்டிருந்தது. தொடர்ந்து மணல்வீட்டில் அடுத்தடுத்து சில கதைகள் வெளியானது. ஒன்பது கதைகளுடன் தற்போது அவை தொகுப்பாக வெளியாகியிருக்கிறது. தற்காலச் சிறுகதைகளில் பாய்ச்சல் நிகழ்த்துவதாக அறுதியிடப்படும் எவரிடமிருந்தும் சித்துவின் சிறுகதைகள் வேறுபட்டவை. உண்மையில் படைப்பு குறித்த கருத்துரைகளைத் தன்மீது சுமத்திக்கொள்ளாதிருப்பதே அவற்றின் படைப்பூக்கத்தைத் தக்க […]

மேலும் படி
முறையிட ஒரு கடவுள்-சர்வோத்தமன் சடகோபன் கதைகளை முன்வைத்து
ஞா.தியாகராஜன்

எந்த அறிவுத்துறையிலும் பயன்படுத்துவதற்குரிய ‘தொண்ணூறுகளுக்குப் பிறகான’ என்னும் வரையறையை சர்வோத்தமனின் ‘முறையிட ஒரு கடவுள்’ சிறுகதை தொகுப்பிற்கு பயன்படுத்தலாம். சடகோபனின் பாத்திரங்கள் கோட்பாடுகளால், தத்துவங்களால், கருத்தியல்களால் உளச்சிக்கல்களுக்கு ஆளாகுபவர்கள். இந்தச் சந்தை மயமாக்கப்பட்ட உலகத்தில் தனது அடையாளத்தை எதன் மூலமாவது நிறுவிக்கொள்ள முயன்றுகொண்டிருப்பவர்கள். அது முடியாமல் அலைக்கழிபவர்கள். ஒரு வகையில் இவற்றின் படைப்பாக்கம் சுயத்திலிருந்து புனைவுக்கு நகர்கிறது. இதில் எங்கேயாவது படைப்பாளரை வாசகன் கண்டுகொள்ளக் கூடிய வாய்ப்பிருக்கிறது. சிற்றிதழ் மரபின் தற்போதைய தீவிர இலக்கியம் என்னும் வரையறைக்கு […]

மேலும் படி
தமிழ் நவீன கவிதை: வரலாறும் வகைமைகளும்
பிரம்மராஜன்

ஒரு நிஜமான கவிஞன் ஒரு வருடத்திற்கு அப்பாலோ அல்லது ஒரு தசாப்தத்திற்கு அப்பாலோ அவன் எழுதவிருக்கிற கவிதை பற்றிய ஆரூடத்தைச் சொல்ல முடிந்தால் அதை அவன் எழுத வேண்டிய அவசியம் வராது. ஒரு கவிதை இயக்கத்தின் போக்கு இப்படித்தான் நடக்கக்கூடுமென்று அதன் கொள்கை அறிக்கையாளர்களாலும் கூட முன்னுரைக்க முடியாதது. அந்த அர்த்தத்தில் பார்த்தால் ஒவ்வொரு கவிதையுமே சோதனைக் கவிதையாக ஆக முடியும். அல்லது எழுதத் தகுதியற்றதாகி விடக்கூடும். கவிஞனின் கட்டுப்பாட்டிற்கு அப்பால் நிலவக்கூடிய சூழ்நிலைகள் மற்றும் எல்லைப்பாடுகள் […]

மேலும் படி
எரிந்தும் நூராத் தணல் - தில்லையின் தீரா 'விடாய்'
பொதிய வெற்பன்

(நூரா = அவியா, விடாய்= தணியாத் தாகம். எரிந்தும் நூராத் தணல் = நீறு பூத்த நெருப்பு) தில்லையை நமக்கு அறிமுகப்படுத்தி வைத்தவர் குட்டிரேவதியே. தொகுப்பேதும் வாரா நிலையில் தில்லையின் உதிரிக்கவிதைச் சேகரத்திலிருந்து அறிமுகத்தை 'ஆண்குறி மையப் புனைவைச் சிதைத்த பிரதிகளி'ல் முன்வைத்தார் குட்டிரேவதி. இத்தொடர்பில் இன்னொன்றையும் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. இத்தலைப்பை மாற்றித்தருமாறு 'வம்சிபுக்ஸ்' கேட்ட போது மாற்றிட மறுதலித்தே அந்நூல் 'நாதன் பதிப்பக' வெளியீடாக வெளிவர நேர்ந்தது. 'லிங்கமையச் சொல்லாடல்' என்பது பின்னைநவீனத்துவ முறையில் ஆணாதிக்கத்தைச் […]

மேலும் படி
ஜின்னின் இருதோகை: ஒரு மறுவாசிப்பின் அலசல்.
சப்னாஸ் ஹாசிம்

கவிதைகள் காட்சிமொழி (Figurative language) சார்ந்து உறுதிபெறும்போது அவற்றின் கட்டமைப்பு அதிகக் கவனம் பெறமுடியும் அல்லது கவிதையின் அமைப்பை உருவற்றது(formless) என நிறுவ முடியும். அது கவிதைக்குரலின் மொழிவை அதன் படிமங்களிலிருந்தும் குறியீடுகளிலிருந்தும் தொன்மங்களிலிருந்தும் வடிவக்குறையிலிருந்து மேம்படுத்தலாம். அப்படி ஈழத்துக் கவிஞர் அனாரின் கவிதைகளை நுண்மை சார்ந்து அணுகமுடியும். ஜின்னின் இருதோகை தொகுப்பிலிருந்து அவருடைய கவிதைகள் கவிதைக்குரலின் மனோவியல் (Psychoanalytical) தொடர்பிலான ஆய்வொன்றை கட்டமைப்பு சார்ந்து வேண்டி  நிற்கின்றன. அது விரிவாக ஆராயப்படவேண்டியதொன்று. "செவ்வகத்தை நான் வரைகிறேன் […]

மேலும் படி
முடிவிலியின் ஆதார சுருதியை மீட்டும் மீனும் பண்பாடும்
ஆகாசமுத்து

“இசையில் ஒரே ஒரு ஆதார ஸ்ருதிதான் இருக்கிறது. அதுதான் முழுமையானது” என்றார் கர்தர் ஹோம். “ அந்த ஆதார ஸ்ருதியைக் கேட்டுவிட்டவர் எவரும் வேறு எதையும் கேட்கத் தேவையில்லை. என்னுடைய பாட்டெல்லாம் ஒரு பொருட்டே அல்ல. ஆனால் நான் சொல்லும் ஒரு விஷயத்தை நீ எப்பொழுதுமே ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். இந்த உலகம் உனக்கு எல்லாவற்றையும் கொடுத்துவிட்ட பிறகு, புகழின் ஈவு இரக்கமற்ற நுகத்தடி உன் தோளில் ஏற்றப்பட்டு, மிகக் கொடிய குற்றவாளியின் மீது பதியப்படுவது போல் […]

மேலும் படி
மேல் செல்