கலை இலக்கிய விமர்சன சிறு சஞ்சிகை
கவிதையை இனம் காணுதல்: இந்த நூற்றாண்டிற்கான கேள்விகள்
ஞா. தியாகராஜன்

கவிதை எந்த அற்புதத்தையும் நிகழ்த்துவதில்லை அது எளிய விஷயங்களை நேசிக்கிறது. சற்றே தயக்கத்துடன் உங்கள் தோட்டத்தில் முளைத்திருக்கும் நீங்கள் விதைத்திராத புதிய தாவரம்; சுவர் மீது கால் வைத்து நீங்கள் பந்து விளையாடுவதையே தலைசாய்த்துப் பார்க்கும் பக்கத்து வீட்டு நாய்; ரயிலில் மடியில் உறங்கும் சிறுமியைத் தட்டிக்கொடுத்துக்கொண்டே மறு கையில் புத்தகம் படிக்கும் அன்னை; பிளாட்பாரத்தில் வடை விற்பவன் பின்னால் நடந்து போகும் காகம்; கவிதை எந்த அற்புதத்தையும் நிகழ்த்துவதில்லை. ஏற்கெனவே நிகழ்ந்துகொண்டிருக்கும் ஒரு பெரிய அற்புதத்தைக் […]

மேலும் படி
கவிதைகளுக்குள் பிறன்மை: நான், நீ மீதான ஓர் அவதானம்
இமாம் அத்தனான்

‘நான்’கள் எழுத்து இலக்கியம் என்பது மன்னர்களைப் பற்றியும், வீரதீரர்களைப் பற்றியும், பெருங்கடவுளர்களைப் பற்றியும், மதங்களைப் பற்றியும் மய்யப்படுத்தி விதந்தோதும் எழுத்துகளாகச் சமைந்துகிடந்த ஒரு காலம் இருந்தது. அப்படியான எழுத்து இலக்கியங்களுக்கே செல்வாக்கும் மன்னர்களின் அதிக ஆதரவும் இருந்திருக்கும். வரலாறும் பதிவுகளும் கூட இவர்களை மய்யப்படுத்தியதாகவே இருந்து வந்தது. அன்று எழுத்திலக்கியத்திற்குள் சாதாரண மக்களின் வாழ்க்கை, அனுபவங்கள், அன்றாடப் பிரச்சினைப்பாடுகள் என்பன எழுத்துப் பிரக்ஞையை அடையாமல் வெளியே வைக்கப்பட்டிருந்தன. இப்படி வெளியே வைக்கப்பட்டிருந்தவைகளுள் ஒன்றாக ‘எழுதுபவர்களின் தன்னிலைகளையும்’ குறிப்பிடலாம். […]

மேலும் படி
நவீனத் தொன்மங்களும் நாடோடிக் குறிப்புகளும்: ஒரு வாசிப்புரை
யவனிகா ஸ்ரீராம்

ஒரு வெள்ளையன் கடல்வழியாக ஒரு கறுப்பனுடன் இணைக்கப்படாதவரை இருவருக்கும் தங்களது நிலப்பரப்பு என்பது ஒரு கிரகமாகவும் மற்றொரு நிலப்பரப்பு அந்நிய கிரகமாகவும் மட்டுமே புனைவாகிறது… (தனது கட்டுரைத் தொகுப்பிலிருந்து ஜமாலன்) மொழியும் நிலமும் என்ற கட்டுரைத் தொகுப்புக்குப் பிறகு 2010இல் வெளிவந்த ஜமாலனின் இரண்டாவது கட்டுரைத் தொகுப்பு ‘நவீனத் தொன்மங்களும் நாடோடிக் குறிப்புகளும்’ என்ற புலம் வெளியீட்டுப் புத்தகம். ஏறக்குறைய உலகின் அனைத்து நிகழ்வுகளும், புதிய கட்டமைப்புகளும் நிகழ்ந்துவிட்ட 19ஆம் நூற்றாண்டு தொடங்கி சமகாலம் வரை உருவான […]

மேலும் படி
மூதந்தை திருவெழுத்து
மஞ்சுநாத்

மனித மனம் ஒரு வடிவமைப்புக்குள் பொருத்திக் கொள்வதற்கு ஒருபோதும் விரும்புவதில்லை. அதன் இயல்பும் விரிவடையும் வெளியும் எல்லையற்றது. ஆனால்  மன எல்லையின் விரிவடையும் சாத்தியத்தை வாசகன் தனது செளகரியத் தன்மைக்கு பங்கம் வராது சுய விருப்பம் கொண்டு முடமாக்கி விடுகிறான். ஏதோவொரு வகையில் அசெளகரியமானதாக கருதப்படும் படைப்புகளின் தரிசனங்களை தவற விடுவதற்கு கூர்மையான வாசிப்புத்திறன் இல்லாமையே காரணம். இதனால் தொடர்ந்து தனது விருப்பத்தை சொறிந்துவிடும் படைப்புகள் மீது மட்டுமே செலுத்துகிகிறான். தமிழ் வாசகப்பரப்பு இதய பலவீனம் கொண்டதாகவும் […]

மேலும் படி
ஜி. நாகராஜனின் படைப்புலகம்
மனுஷ்யபுத்திரன்

(1997 ஆம் ஆண்டு செப்டம்பர் 10 ஆம் தேதி திருநெல்வேலியில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் வாசிக்கப்பட்ட கட்டுரை) தமிழின் நவீன இலக்கிய வெளியில் மத்தியதர வாழ்வின் ஆசாபாசங்களும் பெருமூச்சுகளும் மதிப்பீடுகளும் நம்மை மிகவும் ஆயாசமடைய வைத்துள்ளன. இந்த நூற்றாண்டின் தமிழ் இலக்கியத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள தமிழ் வாழ்க்கையின் பரப்பு சின்னஞ்சிறியது; சில உயர் இடைநிலை சாதிகளின் _ வர்க்கங்களின் அனுபவத்திலிருந்தும், கண்ணோட்டத்திலிருந்தும் உருவாக்கப்பட்டது. மத்தியதர வாழ்வின் அறவியல் அழகியல் பிரச்சனைகள் தமிழ் இலக்கியத்தின் பிரச்சனைகளாக இருந்து […]

மேலும் படி
நவீன கவிதைகளில் சமகால அரசியல் உணர்வு
ஞா.தியாகராஜன்

ஏனெனில் இந்நூற்றாண்டின் அரசியலென்பது ‘சர்வவியாபகம்’ கொண்டது. மனிதனின் ஒவ்வொரு தெரிவிலும் விருப்பத்திற்கு மாறாக விளம்பர உலகின் கருத்தியல் திணிப்புகளைச் செயலாற்றுகின்றன. இந்த நீரோட்டங்களில் வழியாகச் சமீபத்தில் வெளியாகியுள்ள நவீன கவிதைப்பிரதிகளில் இடம்பெறும் சமகால அரசியல் உணர்வுகளை இக்கட்டுரை கோடிட்டுக்காட்டுகிறது. நவீன இலக்கிய ஆக்கங்களில் அரசியல் என்பது தவிர்க்க முடியாததாகும். உள்ளொளி, தரிசனம் போன்ற பேறுகளிலிருந்து தொண்ணூறுகளுக்குப் பிறகு கவிதை புதிய கதியில் இயங்க தொடங்கியது. பெண்ணியமும், தலித்தியமும், பிற நவீன கோட்பாடுகளும் மனிதனைச் சுற்றி கவியும் அரசியலை […]

மேலும் படி
மேல் செல்