கலை இலக்கிய விமர்சன சிறு சஞ்சிகை
செந்நீராலும் கண்ணீராலும் கட்டமைக்கப்பட்ட பொதுவுடைமை இயக்கத்தின் வரலாறு – கே.வி. மோகன்குமாரின் “உஷ்ணராசி”
முனைவர் இரா. செங்கொடி

இரண்டாம் உலகப் போர் அனைத்து மக்களின் வாழ்க்கையிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. போருக்குப்பின் பொருளாதார சீர்குலைவு, வறுமை, வேலைவாய்ப்பின்மை போன்ற சிக்கல்கள் ஒருபுறமும், மக்களை வாட்டி வதைத்தன. மறுபுறம் பதுக்கல், கள்ளச்சந்தை போன்ற சமூக விரோத செயல்களும் செழித்துப் பெருகின. இத்தகைய ஏற்றத்தாழ்வுகள் அன்றைய சமூகத்தில் நிலையற்றத் தன்மையை ஏற்படுத்தின. இதன் விளைவாக ஒடுக்கப்பட்ட மக்கள் ஒருங்கிணைந்து அதிகாரத்திற்கும் ஆளும் வர்க்கத்திற்கும் எதிராகக் குரல் எழுப்பினர். வங்காளத்தில் தெபாக போராட்டம், தெலுங்கானாவில் நிஜாம்களுக்கெதிரான விவசாயக் கூலிகளின் போராட்டம், […]

மேலும் படி
எழுத்தில் படிந்த நிலம்
ப்ரேம் ரமேஷ்

(கி.ரா. : ஒரு பின் நவீனத்துவ மிகை வாசிப்பு) பேச்சு முடியும் இடத்திலிருந்து எழுத்து தொடங்குகிறது. எழுத்து தொடங்கும் இடத்திலிருந்து மௌனம் என்பது பேச ஆரம்பிக்கிறது. மௌனம், பேச்சு, எழுத்து என அனைத்தும் ஊடாடும் களத்தில் கதையாக்கம் நிகழ்கிறது. எல்லா மொழிகளும் புனைவிலிருந்தும் பாவனைகளிலிருந்தும் தொடங்குகின்றன. இந்த புனைவுகளும் பாவனைகளும் மனிதர்களை உற்பத்தி செய்து தருகின்றன.மனிதர்களை உற்பத்தி செய்து உலவவிடும் இந்தப் புனைவுகளும் பாவனைகளும் பெரும் பரப்பாக,சூழ்வெளியாக மனிதர்களைக் கவிந்து கிடக்கின்றன. மனித நிலைகளின், சேர்க்கைகளின் அலைவும் […]

மேலும் படி
கற்றது கவிதைகளினால் மனதிலாகும் உலகு
எம்.டி.முத்துக்குமாரசாமி

மறைந்த மலையாள விமர்சகர் கிருஷ்ணன் நாயர் அவருடைய புகழ் பெற்ற கலாகோமுதி வாராந்திர பத்தியில் பல வருடங்களுக்கு முன் எக்சிஸ்டென்ஷியலிசம் அதிகம் புழங்கப்பட்ட மலையாள இலக்கிய சூழல் குறித்து எழுதியிருந்தார். கிருஷ்ணன் நாயர் பள்ளிகளை ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கும் ஆய்வாளராக பணியாற்றியவர். அவர் தன் பணி நிமித்தமாக ஒரு பள்ளிக்குப் போக நேர்ந்தது. அந்தப் பள்ளியின் தலைமையாசிரியர் அதிகமான வேலைப் பொறுப்பில் இருப்பதான தோரணையைக் காட்டிகொண்டு கோப்புகளை பார்த்துக்கொண்டே கிருஷ்ணன் நாயரை தனக்கு எதிரில் […]

மேலும் படி
சமகால கவிதைகளில் தொடரும் தேக்கமும் சில கவிதைகளின் வாசிப்பும்
ஞா.தியாகராஜன்

கவிதைக்கான வாசிப்பு பயிற்சியென்பது தமிழ் சூழலில் பெரும்பான்மையும் ரகசிய செயல்பாடுதான். பயிற்சி என்பதே அந்நியமாகத் தோன்றும் அளவுக்கு அது மழுங்கடிக்கப்பட்டிருக்கிறது. அதிகம் புழங்கும் வடிவமாகவும் அதே அளவுக்கு நிராகரிக்கப்படும் வடிவமாகவும் கவிதை இருக்கிறது. கவிதை சார்ந்த ஒருவித செவ்வியல் வாசிப்பும், கொஞ்சம் நிதானமான ரொமாண்டிக் வகைமைகள் மட்டுமே தொடர்ந்து முன்னிறுத்தப்பட்டும் படைக்கப்பட்டும் வருகிறது. கவிதை தளத்திற்கான சரியான விமர்சனங்கள் மற்றும் செறிவான கட்டுரைகளில் நிலவும் போதாமை ஆகியவை காரணமாகக் கவிதை வடிவத்தில் ஆர்வம் கொள்ளும் புது வாசகனும் […]

மேலும் படி
கவிஞன் – தரகன் – விற்பனைப் பிரதிநிதி
ராணி திலக்

ஒரு போதும்  வராத அலைபேசி  அழைப்புக்காக வீணாகக் காத்திருக்காதே - ஜியோங் ஹோ-சியுங் தொலைக்காட்சி  என்னை ஐந்து நிமிடங்களில் நோய்வாய்ப்படுத்தும்.  ஆனால் ஒரு மிருகத்தை  மணிக் கணக்கில்  என்னால் பார்க்கமுடியும்  - சார்ல்ஸ் புக்கோவ்ஸ்கி டிஜிட்டல் உலகத்தின் மீது மிகுந்த சந்தேகத்துடன் இருக்கிறேன். டிஜிட்டல் உலகம் செவிட்டுத்தன்மை உடையது என்றே நினைக்கிறேன். ஏனென்றால் அங்கே ஒலி இல்லை. – w.s.மெர்வின் இப்போது அனைத்தும் டிஜிட்டல் யுகம் ஆகிவிட்டது. பெரும்பாலான படைப்பாளர்கள் டிஜிட்டல் யுகத்தின் அடிமையாகிவிட்டார்கள். ஏதாவது ஒன்றைத் […]

மேலும் படி
விளம்பரயுகத்தில் இலக்கிய வெளி படும்பாடு
க.பஞ்சாங்கம்

மனிதர்கள் அடிப்படையில் விளம்பரப் பிராணிகள். தன்னை, தன் சூழலை, தான் அறிந்ததை, தான் படைத்ததை விளம்பரப்படுத்த பல்வேறு பருண்மையான நுண்மையான உத்திகளைப் பயன்படுத்துவதன் மூலம் தன் அதிகாரத்தின் எல்லையை மட்டுமல்ல, பொருளாதார வளத்தையும் விரிவாக்கிக் கொள்ள முடிகிறது. இவ்வாறு தன்னை விளம்பரப்படுத்தி நிலைநிறுத்திக் கொள்வதன் மூலம், தன்னையும் பலவாறாகப் பெருக்கிப் பல காத தூரத்திற்குப் பெரிய வலை போல விரித்துப் பலவற்றையும் வாரி அள்ளிப் போட்டுக்கொள்ளக் கூடிய விதவிதமான வழிகளும் திறந்தவண்ணம் இருக்கின்றன. இலக்கிய வெளியில் இத்தகைய […]

மேலும் படி
மேல் செல்