கலை இலக்கிய விமர்சன சிறு சஞ்சிகை
நான் எழுதாத முன்னுரையும் போர்ஹெசின் கவிதைகளும் (பகுதி I)
எம்.டி.முத்துக்குமாரசாமி

என்னுடைய “நீர் அளைதல்” கவிதைத் தொகுதி நற்றிணைப் பதிப்பக வெளியீடாக அச்சில் வெளிவரவிருக்கிறது. அத்தொகுதிக்கு ஒரு முன்னுரையை எழுதுமாறு நற்றிணைப் பதிப்பகத்தின் ஒருங்கிணைப்பாளர் யுகன் கேட்டிருந்தார். நான் பல நாட்கள் நன்றாகத் தூக்கம் போட்டேன், என் மகன்களைக் கொஞ்சி விளையாடினேன், கோடையின் வெக்கை தணிய பூமி குளிர பெய்த முதல் மழையில் விட்டேத்தியாக நனைந்தேன், இஷ்டம் போல் செவ்வாழையும் நேந்திரனும் சாப்பிட்டேன் ஆனாலும் ஒரு வரி கூட முன்னுரைக்காக என் மனதில் உதயமாகவில்லை. மெல்லிய, சிறிய முதல் […]

மேலும் படி
நேற்றின் ஜன்னலுக்குப் பார்வையைத் திருப்புதல் – பா.ராஜாவின் கவிதைத் தொகுப்பு
ஜீவன் பென்னி

அன்றாடங்களின் எல்லையற்ற வெளி : கவிதைகளின் சொல்லாடல்கள் ஒரு உலகினை உங்களுக்கு மிக நெருக்கமானதாக உணர்ந்து கொள்ள வைக்கின்றன மேலும் மனதின் எல்லையற்ற தூரத்தின் நினைவுகளை ஒரு கவிதையில் தான் மிக நேரடியாகத் துவங்கிக்கொள்ளவும் அனுபவிக்கவும் முடிகிறது. நிகழ்வுகளின் சங்கதிகளையும் அதன் அனுபவப்பரப்பின் நுட்பமான புள்ளிகளையும் செயல்களின் தளத்திலிருந்து மெய்மையின் அடர்த்தியான தீவிரத்தன்மைக்கு அருகாமையில் கொண்டு வந்திடும் புத்துணர்ச்சிகளையே ஒவ்வொரு நல்ல கவிதையும் செய்கின்றன. அறிவின் சூத்திரங்களைப் பின்தொடர்ந்திடும் லாவகமான தன்மையிலிருந்து விலகி வாழ்நிலைகளின் படிமங்களிலிருக்கும் மனவெழுச்சிகளின் […]

மேலும் படி
‘ழ என்ற பாதையில் நடப்பவன்’- பேசப்பட்டதும் பேசப்படவேண்டியதும்
ஞா.தியாகராஜன்

தனது வரம்பென ஏதாவது ஒன்று சொல்லப்படும் போது அதை முதலில் மீறி தன் சுதந்திரத்தை நிலைநாட்டிக்கொள்வது இலக்கியத்திற்கு மட்டுமே உரிய ஒன்று. இந்த சுதந்திரத்தை தொடர்ந்து பிரகடனப்படுத்திக் கொள்வதில் மற்ற வடிவங்களை விட  கவிதை முதன்மை வகிக்கிறது. அதற்கேற்றாற் போல் தமிழில் கவிதை இயற்றும் படைப்பாளர்களின் வீரியம் சமகால பிறமொழி இலக்கியங்களுக்கு சளைத்தது அல்ல என்பதை ஒப்புக்கொள்ளவே வேண்டும். யாரென்று தெரியாத ஒருவரிடமிருந்து கவிதை அதன் முகத்தை புதுப்பித்துக்கொள்ளும். இலக்கியத்தின் அயராத எதிர்ப்புகுணம் வெளிச்சத்திற்கு அப்பால் இயங்கக்கூடிய […]

மேலும் படி
இந்திரா பார்த்தசாரதியின் புலம் இல்லாத நாவலும் கலையாகாத விமர்சனமும்
சு.வேணுகோபால்

இந்திரா பார்த்தசாரதியின் படைப்புலகக் களங்களைப் பொதுவாக மூன்று பிரிவுகளில் அடக்கலாம். தஞ்சை பகுதி சார்ந்து, தில்லிபுலம் சார்ந்து, மேல்நாடு சார்ந்து எழுதப்பட்ட படைப்புகள் அவருடையவை. குறிப்பாகச் சொல்லவேண்டும் என்றால் தில்லி, கும்பகோணம் பின்னணியில் எழுதப்பட்ட படைப்புகள் அதிகம். பின்னணி என்று சொல்வதைவிட தோராயமான இடப்பின்னணி என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது. கதை எங்கே நடக்கிறது என்பதற்குக் கதை மயிலாடுதுறையில் நடக்கிறது என்று பெயர்களை வைத்து சொல்லிக் கொள்ளும்படியான பின்னணி என்று கூடச் சொல்லலாம். ‘நாசகாரக்கும்பல்’, ‘ஒரு கப் காப்பி’, […]

மேலும் படி
பீஃப் கவிதைகள்
பச்சோந்தியின் வேடிக்கைகள் குறித்து...
வசுமித்ர

கால் நடைகள் நமது நண்பர்கள்; பெற்றோர்களைப் போலவும், உற்றார் உறவினர்களைப் போலவும் விளங்கும் இவைகளே உழவுத் தொழிலுக்கு அடிப்படை. இவை உணவையும் பலத்தையும், உடற்பொலிவையும், இன்பத்தையும் அளிக்கின்றன. இதை அறிந்த பண்டைய பிராமணர் கால்நடைகளைக் கொல்வதில்லை. புத்தர். முன்னுரையில் தனது பாடுகளையும் பெற்ற பாராட்டுகளையும் சொல்லிச் செல்லும் பச்சோந்தி, தனது பீஃப் கவிதைகள் முழுக்கவும் வேடிக்கை பார்க்கவும், சொல்லவும், விவரிக்கவுமாகவே இருக்கிறார். அவரது கவிதைகள் உருவத்தில் மட்டுமே தன்னைக் கவிதைகளாக அறிவிக்கிறது. உள்ளடக்கத்தில் விவரணைகளைத் தாண்டி வேறு […]

மேலும் படி
ஷோபா சக்தியின் இச்சா : அரசியல் நீக்கப்பட்ட ஓர் அபலையின் வாழ்வு
றியாஸ் குரானா

போர் சார்ந்த கதைகளை இலக்கியப் புனைவுகளாக மாற்றும்போது, மிக ஆழமான கவனம் தேவை. வெறுமனே ஒரு கதையைச் சொல்லும் சாகசங்களில் இறங்கிவிடக் கூடாது. சம்பவங்களை ஒருங்கிணைக்கும்போது உருவாகும் கதையாடல் “ஒரு வீரத்தின் கதை”யாக மாறிவிடக்கூடாது . கட்டளையிடும் நபர்களைவிட, ஒரு சிப்பாயைப் “பாதிக்கப்பட்டவர்” என விவாதிப்பதில் கடினமான எண்ணம் கொண்ட பார்வை அவசியமானது. அது தவறவிடப்படும் தருணங்களில் ஏதோ ஒன்றை மகிமைப்படுத்தும் இழைகள் துருத்திக்கொண்டு வெளியே தலைகாட்டிவிடும். யுத்தத்தை நினைவுகூர்வதில் ஏக்கம் மற்றும் உணர்ச்சிகளின் அபாயம் கவனத்திற்கொள்ளப்பட […]

மேலும் படி
குறிச்சொற்களால் இயங்கும் கருத்துருவ இயந்திரங்களின் தோற்றநிலை குறித்த இருமையின் உசாவல் - 'ஷம்பாலா'
யாழ் அதியன்

மொழி குறிவயமானதால் மொழியினூடாக இயங்கும், இயக்கப்படும் மனித உடல்களைக் குறிகளின் ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவருவது என்பது அதிகாரத்தின் பல நுண்ணலகுகளால் மூளையை வடிவமைப்பதாகவும் மாறிவிடுகிறது. இத்தகைய குறிவயமாக்கல் மொழிக்குறிகளின் பன்மைத்துவக் குறிப்புநிலைகளை அழித்து, தெரிபுகளை முதன்மையாக்கி அதிலும் மாறாத திட்டமிட்ட குறிப்பீடுகளை வடிவமைக்கிறது. இவ்வடிவமைப்புகளிலிருந்து உடல், பால், நிறம், மொழி, இனம், மதம் என்று பண்பாட்டுக் கருத்துருவ இயந்திரம் பல நிலைகளில் இயங்குகிறது. இக்கருத்துருவ இயங்குநிலை குடும்பம், சமூகம், கல்வி – மருத்துவம் – அறிவியல் முதலிய […]

மேலும் படி
யாம் சில அரிசி வேண்டினோம் -அழகிய பெரியவனின் நாவலை முன்வைத்து…
கமலாலயன் - ஒரு வாசக அனுபவம்

நாங்கள் வயிற்றுக்குச் சோறு பொங்குவதற்குக் கொஞ்சம் அரிசி கேட்டால் யானையைக் கொடுக்கிறாயே, இதை வைத்துக் கொண்டு நாங்கள் என்ன செய்வது?” என்று கேட்கிறார் அவ்வை. நாம் வாழ்கிற இந்தச் சமகாலத்து மன்னர்களும், சக்கரவர்த்திகளும் இதே போல்தானே மக்களிடம் கோமாளித்தனம் செய்து கொண்டிருக்கிறார்கள்?

மேலும் படி
மேல் செல்