கலை இலக்கிய விமர்சன சிறு சஞ்சிகை
நூல் விமர்சனம்: அனோஜன் பாலகிருஷ்ணனின் சிறுகதைகளில் ஆண்களும் எதிர்ப்பாலியல் ஒழுங்கமைப்பும்
ஹரி இராசலெட்சுமி

முகிழ்த்தெழுந்த கலவியின்பங்களிலும் என் தன்னிலை ஆச்சரியப்படுத்தியது (பக்51) ...என்னை நானே வெறுக்க எத்தனித்து என் போலித்தனத்தைக் கண்டு சோர்வடைந்தேன். (பக்.54; சதைகள், 2016) அனோஜன் பாலகிருஷ்ணன் வெகுவாகவே கவனம் பெற்ற இளம் எழுத்தாளர். தரமானவை என்று கருதப்படும் எல்லா இலக்கிய இதழ்களும் - இலங்கை, தமிழ்நாடு, புலம்பெயர் தேசங்கள் வேறுபாடின்றி - அனோஜனின் சிறுகதைகளைப் போட்டிப் போட்டுக்கொண்டு பிரசுரிக்கின்றன. சமூகவலைத்தளங்களில் அவருக்கென்றே ரசிகர்கள் உருவாகி வருவதையும் காணமுடிகிறது. இதற்கான காரணங்கள் நிச்சயமாக உண்டு. இலகுவான, வீண் சிக்குப்பாடுகள் […]

மேலும் படி
மேல் செல்